புத்தக மூட்டை


காகிதக்கூழ் கட்டுகளும்

பதிப்பகத்தின் வடிவமைப்பும்

கவிஞரின் கற்பனையும்

ஓவியனின் திறமையும்

அரசியலின் ஆதிக்கமும்

ஆசிரியரின் விளக்கவுரையும்

எங்கள் கையெழுத்துக்களாம்
             தலையெழுத்துக்களும்

எங்கள் முதுகினிலே 
           புத்தக மூட்டைகளாய்!

நாளைய பாரதம் தலை நிமிர
நாங்கள் இன்று கூனி குறுகுகிறோம்!

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?