ஆசிரியருக்கு ஒரு கேள்வி

ஆசிரியர்களே,

மாணாக்கரை
படிக்கச் சொன்னீரா?
படுக்கச் சொன்னீரா?

உண்ணுவது  தவிர்த்து
உறங்கியே கழிக்கிறான்.

விழிப்பு என்பதற்கே
விடுமுறை போலும்.

"காலம் பொன் போன்றது"
ஆம், வீனாக்குவதே இல்லை.

"காலத்தை வீணாக்காதீர்"
விழித்தால் தானே வீணாகும்.

உறக்கமே முக்கியமானதால்தானோ
விழித்துக்கொண்டே இருக்கிறது மக்கள் தொகை!

எனவே தான்
ஆசிரியர்களே

மாணாக்கரை
படிக்கச் சொன்னீரா?
படுக்கச் சொன்னீரா??

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?