இரங்கற்பா

மாப்ள...மாப்ள...மாப்ள...
மூச்சுக்கு முன்னூறு முறை
முணுமுணுக்குமே உன் வாய்
மறுதலிக்கிறதே இப்போது ஏன்?
சொல்லு மாப்ள சொல்லு!

அலைபேசி அழைப்புக்கெல்லாம்
அதிருமே "மாப்ள சொல்லு"
அமைதி ஆகியதே அந்த வார்த்தை எப்படி?
சொல்லு மாப்ள சொல்லு!

மின்சார துண்டிப்பா
முதலாவது  அழைப்பது உன்னைத்தானே
இனி யாரை அழைப்பேன் நான்?
சொல்லு மாப்ள சொல்லு!

"உன்னைத்தானே மாப்ள செய்ய முடியும்"
உரிமையான உனது கேலியும் கிண்டலும்
வச்சு செய்வாயே, இனி யார் செய்வார்
சொல்லு மாப்ள சொல்லு!

ஊருக்கு வரும்போதெல்லாம்
உடனே வந்து பார்ப்பாயே
பாசமாய் விசாரிப்பாயே
இனி யார் விசாரிப்பார்?
சொல்லு மாப்ள சொல்லு!

''உனக்கென்ன மாப்ள நீள காலு...நில்லு''!
என்று தானே எப்போதும் சொல்வாய்
இன்று நீ மட்டும் எப்படி முந்தி சென்றாய்?
சொல்லு மாப்ள சொல்லு!

எதையுமே கேட்டதில்லை....
"காலம் வரும்போது கேட்பேன்"
என்றாயே எப்போதும்
காலன் வந்து விட்டானே..ஏன்?
சொல்லு மாப்ள சொல்லு!

அங்கே அப்பா அழைத்ததால் சென்றாயே,
இங்கே அப்பா என்றழைக்கும்
எம் மருமக்களுக்கு என்ன பதில்?
சொல்லு மாப்ள சொல்லு!

சிரிப்பைத் தானே  தந்திருக்கிறாய் எப்போதும்
கண்ணீரை தாரை வார்க்கிறாயே இப்போது
நியாயமா எப்போதும் ?
சொல்லு மாப்ள சொல்லு!







Comments

Popular posts from this blog

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?