கூட்டாஞ்சோறு

      எல்லோரும் காதலை வெறுப்பர்; 
      காதல் தோல்வியால்.
      நானும் கூட வெறுக்கிறேன்;
      காதலி இல்லையென்று!

     heart is empty
      mediastinum is vacant
      because
      it's not with me;
      ....in you!

   அடியே,
    நீ
    முதுகையே அழகு செய்து
    முகமாய் எனக்குக் காட்டி
    முட்டாளாக்க
    முற்படுவதால் தான்
    நான் இன்னமும் காதலிக்க
    முயற்சிக்கவே இல்லை 
    உன்னை மட்டும்!


     பணமும் மழையும்..

    வரும் வரை 
    வேண்டும் வேண்டும் என்பார் 
    வந்துவிட்டால் 
    போதும் போதும் என்பார்

      கஞ்சி நனைத்தேன்
      இளஞ்சூட்டில் தேய்த்தேன்
      நீராவியுடன் தேய்த்தும் 
      நிமிர மறுக்கிறது
      இடுப்பு மடிப்பு!

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?