எதை? எதை??





தேர்வு நடந்து கொண்டிருந்தது .
தேர்வு எழுதுவோர் நூற்றுக்கும் மேல்..
கண்காணிப்பாளர்கள் நான்கைந்து பேர்.
அவர்களின் மெல்லிய நடை... கூறிய பார்வை....
அவன் எதையுமே சட்டை செய்யவில்லை .
கண் கொட்டாமல்  பார்க்கிறான்.

எனது இடது பின் புறமிருந்து 
என்னை, என்னை மட்டுமே  
கூர்ந்துப் பார்க்கிறான்.
தாவணியை சரி செய்து கொண்டேன்;
மீண்டும்  அதே பார்வை.

நான் திரும்பிப்  பார்த்தால் 
தலை கவிழ்ந்து எழுதுவான்.
நான் பெண் என்பதாலோ? 
வெட்கம் கலந்த பயம்.
விடைத்தாளை திருப்பும் போது  
அவன் கண்கள் வெறித்து நிற்கின்றன.

"மேற்பார்வையாளரிடம் சொல்லலாம்;
அவன் மாட்டிக் கொள்வான்;
என்னையும் பாதிக்குமே;
சீருடைக்கு விடிவு காலம் வராதா?"
போராட்டத்தில் என் மனம்!

மனப்போராட்டம் முடிவுக்கு வந்தது,
அவன் எண்ணம் புரிந்தது 
அவன் பருவப் பெண் தானே நானும்.
ஆசைக்கு இணங்க இசைந்தேன் ,
அவன் பார்வைக்கு 
விருந்தாக்க துணிந்தேன் 

என் விடைத்தாளை!!!


Comments

  1. இதுதான் கருத்துச் சிறப்பு! மிக நன்று!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?