காதலின் இலக்கணம்

பார்க்கத் துடித்தேன் 
நீ பார்த்தால் 
நிலம் பார்த்தேன்.

பேச துடித்தேன் 
பேச துணிந்தால் 
நாவோடு  மட்டுமே முடிகிறது.

சந்திப்புக்கு ஏங்கினேன்.
சந்திக்க நேர்ந்தால் 
விலகி நின்றேன்.

நீ போக 
பின் பார்த்து 
மீண்டும் மீண்டும் 
அதே ஏக்கம்..

ஓ ,!
இது தான் காதலின் காரணமா?
இல்லை 
காதலின் இலக்கணமே இது தானா?

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?