எய்ட்ஸ்
எரிமலையின் குமுறல்;
அலைகடலின் சீற்றம்;
கரை
கடர்
புயலின்
வேகம்;
கோபத்தின் உச்சம்;
குள்ள நரியின் தந்திரம்;
நடுநிசி மயான
அமைதி;
அரக்கனின் அசுரத்தனம்;
மோகத்தின் உச்சநிலை;
அணுவின் ஆற்றல் .........
அத்தனையும் ஒன்றாய்
ஆம்!
அத்தனையும் ஒன்றிலேயே,
துப்பாக்கியின் தோட்டாவாய்,
நாணேற்றிய அம்பாய்,
அணை
திறந்த
வெள்ளமாய் - வருகிறேன்!
சிக்கினோரை தப்பவிடேன்,
உதிரத்தில் புகுந்திடுவேன்,
உயிரினையும் குடித்திடுவேன்!
கேள் கேடுகெட்ட மானிடனே,
உன்
மனை
தவிர்த்து உறவு வேண்டாம்!
சோதித்த இரத்தமின்றி
வேறு வேண்டாம்!!
அசுத்த ஊசியா
வேண்டவே வேண்டாம்!!!
தப்பானால் சிக்கிடுவாய்;
சிக்கினால் தப்பிடாய்.
எனை வென்றிட யாருளார்??
மானுடமே எனதடிமை!
எனவே தான்,
எனை அறிந்து கொள்.
உனை திருந்தி கொள்.
Comments
Post a Comment