Posts

Showing posts from 2020

போராட்டம்

கருப்பையில் உருவாக  கருவறையிலும் கலவியறையிலும் கணவ‍ன் மனைவியின் கடினமான போராட்டம்! இணைகளின் சினைபிடிக்க  'இந்திரியம்', 'அண்டம்' என்னும் இணை ஆயுத அணுக்களின் இணக்கமான போராட்டம்! பெண்மையாய் உருவானால், கருவொரு பிண்டமென பிடிங்கியெரியாமலிருக்க பெண்ணினத்தின் பொறுமையான போராட்டம்! கருக்குளத்தின் நன்னீரின் கரைகடந்து; இருள் துறந்து வெளியேற முன்னூறு நாளளவும் மூச்சடைத்து போராட்டம்! கருப்பை தவம் கலைத்து சுவாசப்பை வெற்றிடம் நிரப்ப நெஞ்சாங்கூட்டிடை உதரவிதானத்தின் உக்கிர போராட்டம்! தொப்புள்கொடி பிரிந்து இரைப்பை வெற்றிடம் நிரப்ப தாய்பாலுக்காக அழுகையுடன், ஆரம்பமே போராட்டம்! தலை நிமிர...உருண்டு புரள... ஊர்ந்து நகர...எழுந்து நிற்க... நடை பழக...ஓடி விளையாட.. முதல் வருடமழுமைக்கும்  முட்டி மோதிய போராட்டம்! மதி கெட்ட மானிடனே, மண்ணுலக வாழ்க்கையே ஒரு போராட்டமடா! போராடினால், "ஆன்றி இந்தியன்" "தேச விரோதி" "தேச துரோகி" "நாடே சுடுகாடாகிடும்" மானுடமே மறவாதே, சுடுகாட்டிலும் ஒரு போராட்டம் உண்டு உன்னுடல் சாம்பலாக உடலுக்கும் நெருப்புக்குமான கடைசி போராட்டம்!

போலி தேச பக்தி

தேச துரோகியாகவே இருக்க விரும்புகிறேன்-நான் தேச விரோதியாகவே மாற விரும்புகிறேன். சாமி கும்பிடுகிறேன் என்பதை மீண்டும் கும்புடுறேன் சாமி என்றாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மதிப்பு மிக்க மனிதனை  மாக்களினும் மட்டமாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மாட்டுக்காக மனிதனை மனுதாபிமான மற்று அடித்தே கொல்வதுதான்  உங்கள் தேச பக்தி என்றால் கோமானேயானாலும் கோமாதாவை கும்பிடுவதும் கோமியத்தை குடிப்பதுவும் தான் உங்கள் தேச பக்தி என்றால் மதத்தின் பெயரால் மனிதனுக்கு மரணத்தை கொடுப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் குடிக்கும் நீருக்காக பூர்வகுடிமகனை அடித்து உதைப்பதை வேடிக்கைப் பார்ப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் தன் நிலம் நாடி நடக்கும்  புலம் பெயர் தொழிலாளரின் நடைபயணத்தை கேலிபேசி கேளிக்கையாக்குவதுதான் உங்கள் தேச பக்தி என்றால் கஞ்சிக்கில்லாமல் கதரும் கடைகுட்டியின் பசி போக்க  கடைவெளிக்கு செல்லாமல் அநாகரீக அதிகாரவர்க்கத்தின்  அடக்குமுறைக்கு அடிபணிந்திருப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளின்  உயிர் காக்க தன்காசில்  உயிர் காற்று வாங்கினால் பரிசு ...

இரங்கற்பா

Image
மாப்ள...மாப்ள...மாப்ள... மூச்சுக்கு முன்னூறு முறை முணுமுணுக்குமே உன் வாய் மறுதலிக்கிறதே இப்போது ஏன்? சொல்லு மாப்ள சொல்லு! அலைபேசி அழைப்புக்கெல்லாம் அதிருமே "மாப்ள சொல்லு" அமைதி ஆகியதே அந்த வார்த்தை எப்படி? சொல்லு மாப்ள சொல்லு! மின்சார துண்டிப்பா முதலாவது  அழைப்பது உன்னைத்தானே இனி யாரை அழைப்பேன் நான்? சொல்லு மாப்ள சொல்லு! "உன்னைத்தானே மாப்ள செய்ய முடியும்" உரிமையான உனது கேலியும் கிண்டலும் வச்சு செய்வாயே, இனி யார் செய்வார் சொல்லு மாப்ள சொல்லு! ஊருக்கு வரும்போதெல்லாம் உடனே வந்து பார்ப்பாயே பாசமாய் விசாரிப்பாயே இனி யார் விசாரிப்பார்? சொல்லு மாப்ள சொல்லு! ''உனக்கென்ன மாப்ள நீள காலு...நில்லு''! என்று தானே எப்போதும் சொல்வாய் இன்று நீ மட்டும் எப்படி முந்தி சென்றாய்? சொல்லு மாப்ள சொல்லு! எதையுமே கேட்டதில்லை.... "காலம் வரும்போது கேட்பேன்" என்றாயே எப்போதும் காலன் வந்து விட்டானே..ஏன்? சொல்லு மாப்ள சொல்லு! அங்கே அப்பா அழைத்ததால் சென்றாயே, இங்கே அப்பா என்றழைக்கும் எம் மருமக்களுக்கு என்ன பதில்? சொல்லு மாப்ள சொல்லு...