GANZALO
கன்சலோ ......16 அக்டோபர் 2014 அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில்,விண்ணின் விடியலைத் தேடிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் மாய முக்கோணத்தின் மூலகோணமாம் பெர்முடாவே கன்சலோ-வின் வருகையை எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. மேற்கிந்திய தீவுகளின் மேற்குப்பகுதியில் வெப்பத்துக்கு காற்றுடன் உண்டான கூடலில் உருவாக்கி,அமெரிக்க அரக்கனை அரவணைக்காமல்,காணாமலே காதல் கொண்ட கள்ளக்காதலன் பெர்முடாவை சந்திக்க 2014-ம் வருடம் அக்டோபர் 16-ம் நாள் மாலை 3 மணிக்கு வருவதாகக் கூறி இரவு 8 மணி வரை அலைய விட்டாள்; பின்பு அசைத்து எடுத்தாள்!ஆம்,அந்த கோரத் தாண்டவமாடிய கொடூரப் புயல் தான் கன்சலோ! தற்பொழுது உயிர்வாழும் எவரும் இதுபோன்றொருப் புயலைக்கண்டதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! ஆபத்தை எதிர்கொள்ள அதன் மாந்தர்கள் ஆயத்தமான கதைதான் புதியது என்றாலும் பல பழைய நினைவுகளையும் தந்தது. கண்ணாடி சாளரங்களெல்லாம் பழுதுகள் நீக்கப் பட்டு, உள்ளே கொக்கிகள் மாட்டப் பட்டு, வெளியே பலகைகள் கொண்டு மறைக்கப்பட்டு ஆணிகளால் கடாவப்பட்டன. பர்தா அணிந்து அழகுகள் மறைக...