Posts

Showing posts from November, 2013

எதை? எதை??

Image
தேர்வு நடந்து கொண்டிருந்தது . தேர்வு எழுதுவோர் நூற்றுக்கும் மேல்.. கண்காணிப்பாளர்கள் நான்கைந்து பேர். அவர்களின் மெல்லிய நடை... கூறிய பார்வை.... அவன் எதையுமே சட்டை செய்யவில்லை . கண் கொட்டாமல்  பார்க்கிறான். எனது இடது பின் புறமிருந்து  என்னை, என்னை மட்டுமே   கூர்ந்துப் பார்க்கிறான். தாவணியை சரி செய்து கொண்டேன்; மீண்டும்  அதே பார்வை. நான் திரும்பிப்  பார்த்தால்  தலை கவிழ்ந்து எழுதுவான். நான் பெண் என்பதாலோ?  வெட்கம் கலந்த பயம். விடைத்தாளை திருப்பும் போது   அவன் கண்கள் வெறித்து நிற்கின்றன. "மேற்பார்வையாளரிடம் சொல்லலாம்; அவன் மாட்டிக் கொள்வான்; என்னையும் பாதிக்குமே; சீருடைக்கு விடிவு காலம் வராதா?" போராட்டத்தில் என் மனம்! மனப்போராட்டம் முடிவுக்கு வந்தது, அவன் எண்ணம் புரிந்தது  அவன் பருவப் பெண் தானே நானும். ஆசைக்கு இணங்க இசைந்தேன் , அவன் பார்வைக்கு  விருந்தாக்க துணிந்தேன்  என் விடைத்தாளை!!!

காதலின் இலக்கணம்

பார்க்கத் துடித்தேன்  நீ பார்த்தால்  நிலம் பார்த்தேன். பேச துடித்தேன்  பேச துணிந்தால்  நாவோடு  மட்டுமே முடிகிறது. சந்திப்புக்கு ஏங்கினேன். சந்திக்க நேர்ந்தால்  விலகி நின்றேன். நீ போக  பின் பார்த்து  மீண்டும் மீண்டும்  அதே ஏக்கம்.. ஓ ,! இது தான் காதலின் காரணமா? இல்லை  காதலின் இலக்கணமே இது தானா?