Posts

Showing posts from 2018

சுதந்திர தின கொண்டாட்டம்

இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? பசியாற ருசியாக உண்ணத்தான்  முடிகிறதா? புலாலுணவு கூடாதென்றால் கூடாதென்கிறான். மாட்டுக்கறி வேண்டுமென்றால்  மனிதனையே கரியாக்குகிறான் ! ஆட்டுக்கறியாவது ஆக்கலாமென்றால்  அசலைமட்டும் வெட்டாதே என்கிறான்! பிரியாணியாக ஆக்கிவிட்டால்  அண்டாவையே அபேஷாக்கிவிடுகிறது  அக்ரஹார அரக்கர் கூட்டம்! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? துடுக்காக மிடுக்காக உடுக்கத்தான் முடிகிறதா? ஹிஜாப் அணிவதென்றால் கூடாதென்கிறான்!  அரைகுறையாக அலையலாமென்றால்  அபச்சாரம் அபச்சாரம்  கலாச்சாரம் போச்சென்கிறான் ! கலாச்சாரத்தைக் காப்பாற்றலாமென்றால்  காவி காவாலிகள் கலவிக்கழைக்கின்றார் ! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? தெய்வங்களை தேவதைகளாய் பூஜிக்கவாவது முடிகிறதா? தேவாலயங்களை தீக்கிரையாக்குகிறான்.  மசூதிகளை மண்மேடுகளாகவே மாற்றி விட்டான். உனக்கான சாமியிடமே வந்தாலும் உள்ளேயே விட மறுக்கிறான்.  சாமியையே மாமிக்கு மட்டும்தான் காட்டுவாளாம்! உரிமையென உறுமினால் உடைமையி...

அச்சுறுத்தும் 2018

உடனிந்தே  உடைந்த உடமை... மறக்க முடியாத மன உளைச்சல்... தூக்கமில்லா இரவு... கடினமான காத்திருப்பு... விடைகளில்லாமல்  விரயமான வினாக்கள்... எதிர்வினைகளே இயல்பாகிபோன எதிர்பார்ப்புகள்... உடல் நுனிகள் மருத்த நியுயார்க் நகர நடுங்கும் குளிர்... பனிப்படலத்தில் பதிந்துபோன பலமற்ற பாதங்கள். ..  தன்னிலை மறந்த தனிமை... வரம்பு அற்ற  வரிசைகள்... காசிருந்தும் கைமாற மறுக்கும் காஃபி குவளைகள்... தலைச்சாய்க்க இயலா தன்னிலை மறந்த தூக்கம்... படுக்க இயலா பரிதவிப்பு... கலங்கும் கண்ணில் கண்ணாடி கண்ணீர்... அச்சுறுத்தும் ஆரம்பம்!!