சுதந்திர தின கொண்டாட்டம்
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? பசியாற ருசியாக உண்ணத்தான் முடிகிறதா? புலாலுணவு கூடாதென்றால் கூடாதென்கிறான். மாட்டுக்கறி வேண்டுமென்றால் மனிதனையே கரியாக்குகிறான் ! ஆட்டுக்கறியாவது ஆக்கலாமென்றால் அசலைமட்டும் வெட்டாதே என்கிறான்! பிரியாணியாக ஆக்கிவிட்டால் அண்டாவையே அபேஷாக்கிவிடுகிறது அக்ரஹார அரக்கர் கூட்டம்! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? துடுக்காக மிடுக்காக உடுக்கத்தான் முடிகிறதா? ஹிஜாப் அணிவதென்றால் கூடாதென்கிறான்! அரைகுறையாக அலையலாமென்றால் அபச்சாரம் அபச்சாரம் கலாச்சாரம் போச்சென்கிறான் ! கலாச்சாரத்தைக் காப்பாற்றலாமென்றால் காவி காவாலிகள் கலவிக்கழைக்கின்றார் ! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? தெய்வங்களை தேவதைகளாய் பூஜிக்கவாவது முடிகிறதா? தேவாலயங்களை தீக்கிரையாக்குகிறான். மசூதிகளை மண்மேடுகளாகவே மாற்றி விட்டான். உனக்கான சாமியிடமே வந்தாலும் உள்ளேயே விட மறுக்கிறான். சாமியையே மாமிக்கு மட்டும்தான் காட்டுவாளாம்! உரிமையென உறுமினால் உடைமையி...