எய்ட்ஸ்
எரிமலையின் குமுறல் ; அலைகடலின் சீற்றம் ; கரை கடர் புயலின் வேகம் ; கோபத்தின் உச்சம் ; குள்ள நரியின் தந்திரம் ; நடுநிசி மயான அமைதி ; அரக்கனின் அசுரத்தனம் ; மோகத்தின் உச்சநிலை ; அணுவின் ஆற்றல் ......... அத்தனையும் ஒன்றாய் ஆம் ! அத்தனையும் ஒன்றிலேயே , துப்பாக்கியின் தோட்டாவாய் , நாணேற்றிய அம்பாய் , அணை திறந்த வெள்ளமாய் - வருகிறேன் ! சிக்கினோரை தப்பவிடேன் , உதிரத்தில் புகுந்திடுவேன் , உயிரினையும் குடித்திடுவேன் ! கேள் கேடுகெட்ட மானிடனே , உன் மனை தவிர்த்து உறவு வேண்டாம் ! சோதித்த இரத்தமின்றி வேறு வேண்டாம் !! அசுத்த ஊசியா வேண்டவே வேண்டாம் !!! தப்பானால் சிக்கிடுவாய் ; சிக்கினால் தப்பிடாய் . எனை வென்றிட யாருளார...